வகுப்பறைக்குள் நுழைந்தபோது, வழக்கமான வணக்கம் கூட மாணவர்களிடமிருந்து வரவில்லை.
அமைதியாக இருந்தார்கள்.
சில நிமிடங்கள் கழித்து “என்ன ஆச்சு..”
- ஆசிரியர். ஒரு மாணவர் கேட்டார்.. “இப்புடி சத்தமே இல்லாம இருந்தா,
அத எப்புடி சொல்வீங்க, சார்” என்றார்.
சில விநாடிகள் யோசித்து விட்டு, “மயான அமைதி” என்றார்.
“சரியான விடை” என்று மாணவர்கள் கைதட்டினர்.
“சரி.. இப்போ எதுக்கு அதைப் பத்திப் பேசுறீங்க..”
“ரெண்டு நாளைக்கு முன்னாடி சிந்துசமவெளி நாகரீகம் பத்தி சார் வகுப்பு எடுத்தாரு...
வரைபடத்தைக் காட்டி, இந்தப் பகுதில எங்க உங்க வீட்டைக் கட்டு விங்கனு கேட்டார்..
ஒரு பையன் லோத்தல்.. ஒரு மாணவி ஹரப்பானு சொல்லிட்டே போனோம்..
ஒரு பையன் மொகஞ்சதாரோனு சொன்னவுடன, அப்படினா என்னனு தெரியுமானு கேட்டாரு..”
“தெரியாதுனு சொன்னோம்” என்றார் மற்றொரு மாணவர் “இறந்தவர்களின் மேடு”
“நிறைய கல்லறை இருக்குமோனு கேட்டோம்”
“யார் வீட்டுப் பக்கத்துலயாவது கல்லறை இருக்கா என்று பதில் கேள்வியைப் போட்டார்”
“நாங்க ரெண்டு பேர் கையத் தூக்குனோம்” “செத்துப் போனவங்களா இருக்குறதுனால அமைதியா இருக்கு. அதான் மயான அமைதி என்றார்”
“ஓ.. சுவாரஸ்யமா போயிருக்கே வகுப்பு. சரி.. நாம தொடருவோம்” “சார்..
இருங்க.. இருங்க.. நாங்க ரெண்டு பேரும் கல்லறைக்குப் போனோம்” “அப்புடியா...
அங்க போய் என்ன பண்ணுனீங்க” “1823ல இறந்துட்டார்னு போட்ட ஒரு சமாதிகிட்ட போனோம்..
மெதுவா, அலோ என்றோம்.. சார்னு சொன்னோம்.. எந்த சத்தமும் இல்லை.. மந்திரம் போட்டோம்..
உள்ளருந்து சத்தம் வந்துச்சு” “உங்களுக்கு பயமாயில்லையா..” “நாங்கதான் மந்திரம் போட்டுருந்தோமே..
நல்லா இருக்கீங்களானு கேட்டோம். பதில் வரலை” “சாப்புட்டீங்களானு நான் கேட்டேன் சார்” என்றார் மற்றொரு மாணவர்.
“நீங்க யாருன்னு கேட்டோம். அதுக்கு அவரு நீதிபதினு சொன்னாரு சார்” “சார்.. கதை விடுறாங்க சார்.”
- மாணவிகள் “அவரு நம்ம ஊருக்காரரு இல்ல சார்..
ஆங்கி லேயரு.. 1820கள்ல நம்ம ஊர்ல நீதி வழங்குற அதிகாரம் அவங்க கைல இருந்திருக்கு. அதை அவரே சொன்னாரு..
இந்தியாவோட ஒவ்வொரு பகுதிலயும் அவங்க அதிகாரம் வேற வேற மாதிரி இருந்துருக்கு” “அதென்ன வேற வேற மாதிரி” “சில பகுதிகள்ல வரி வசூல் பண்றது மட்டும்...
சில இடங்கள்ல நிர்வாகமும், நீதியும்... சில இடங்கள்ல நிர்வாகம் மட்டும்.. இப்ப கூட ஐ.ஏ.எஸ். அதிகாரி களுக்கு நாடு முழுக்க ஒரே பேரு கிடையாது” “இதையும் அவரே சொன்னாரா?” “சார்.. சார்..
இவங்க ரொம்ப ஓவராப் போறாங்க” - மாணவர்கள் “இருங்க..
இருங்க.. சொல்லட்டும்” “ஐ.ஏ.எஸ். அதிகாரியான மாவட்ட ஆட்சியரை, தமிழ்நாட்டுல District Collector, உத்தரப்பிரதேசத்துல District Magistrate, அசாம்ல Deputy Commissionerனு சொல்லுறீங்கள்ல..
அது எங்க காலத்துல இருந்த அதிகாரங்கள வெச்சுதான் அப்புடிக் கூப்புட்டோம். நீங்கள் இன்னும் அதயே வெச்சுருக்கீங்கனு சொன்னாரு” “அவங்க சொன்னது உண்மைதான்” “சார். நீங்களும் அவங்களோட சேந்துட்டீங்களா”
“சொன்ன விஷயம் உண்மைதான்னு சொன்னேன்.. அது சரி... இப்போ தைரியமா மொகஞ்சதாரோவுல வீட்டக் கட்டிடலாமா” “முடியாது” “ஏன்.. பக்கத்துல சொந்தக்காரங்க இருக்க மாட்டாங் களா. அவங்களையும் கூட்டிட்டுப் போயிரலாம்” “இல்ல சார்.
அது இப்போ பாகிஸ்தான்ல இருக்கு.. ஹரப்பாவும் அங்கதான் இருக்கு.. வேணும்னா லோத் தல்ல இடம் வாங்கிக்கலாம்.
அது இந்தியாவுக்குள்ள இருக்கு” “ஆமா. ஏதோ மந்திரம் போட்டதா சொன்னீங்களே. அது என்ன?” “நம்ம மந்திரம்தான் சார்..
ஓம்.. க்ரீம்.. ஐஸ்கிரீம்” என்றார்கள் ஒரு நமுட்டுச் சிரிப்போடு. “ஹே..” என்ற கூச்சல் பலமாக எழுந்தது. ஒரு மாணவர் எழுந்து,
“இந்த மந்திரத்தக் கூட ஏத்துக்க லாம், சார். ஆனா, நல்லா இருக்கீங்களானு கேட்டோம்னு சொன்னாங்க பாருங்க. அது செம உருட்டு, சார்” மணி ஒலித்தது. மாணவர்கள் முகத்தில் வருத்த ரேகைகள்.